திருமணம் ஆகி முதல் மனைவியுடன் ஒழுங்காகக் குடித்தனம் நடத்திய ஒருவன், திடீரென ஒரு சின்ன வீடு செட்டப் செய்கிறான். கடைசியில் மனைவியைக் கவனிக்காமல் சின்ன வீட்டின் மேலேயே அக்கறை கொள்கிறான்..
ஜியோ சிம் உபயோகிக்கும் அனைவருமே இந்த ரகத்தைச் சேர்ந்தவர்களாக மாறி விட்டார்களோ? எனத் தோன்றுகிறது..
கவனிப்பாரற்றுக் கிடந்த மனைவி போல, வடஃபோன், ஐடியா, ஏர்டெல் நம்பர்கள் ஆகிவிட்டன..
கடைசியில் மனைவி கோர்ட்டுக்குப் போய் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்து, மாதா மாதம் ஒரு தொகையை ஜீவனாம்சமாக வழங்க கோர்ட் உத்தரவிட்டது போல, அந்த கம்பெனிகள் (ஜியோ, பி.எஸ்.என்.எல் தவிர) 28 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனச் சொல்லி விட்டன..
No comments:
Post a Comment