Monday, 18 December 2017

கலியின்_ஆரம்பம்.


🐴 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ⚜அழகான குதிரையை அவனும் பார்த்தான். ⚜உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

#குதிரையின்_உரிமையாளரோ,

🐴 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
⚜சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

🐴 குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

🐴 ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

🐴 இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

🐴 சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

🐴 குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

🐴 துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

🐴 நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

🐴 அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

🐴 "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

🐴 பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

🐴 சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

🐴 பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

🐴 அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

🐴 அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள்.

🐴 "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

#தர்மர்பதில்சொல்லத்_தொடங்கினார்..

☸ "தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன."

☸ அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

☸ "உங்களிடம் கேள்வி கேட்டவன்
#கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில்
⚜பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.
⚜ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.

☸ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

☸ ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

☸ அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

☸ ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

☸ அடுத்து மூன்றாவது கேள்வியில்,
பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.

☸ அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.

☸ மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

☸ இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

🚨கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Teacher Student stories

TEACHER: Our topic for today is  Photosynthesis.

TEACHER : What is photosynthesis class?
Student: Photosynthesis is our topic today.
.
.
.

Not Easy to be a Teacher  !!!!!

TEACHER : John is climbing a tree to pick some
mangoes. ( Begin the sentence with Mangoes)
Student : Mangoes, John is coming to pick you

TEACHER : What do you call mosquitoes in your language?
Student: We don't call them, they come on their own.
.
.
TEACHER : One day our country will be corruption free. What tense is that??
Student: Future impossible tense.

THE STRUGGLE CONTINUES
😬😬😬

TEACHER : How can we keep our school clean?
Student: By staying at home.

😊

English Grammar class.

Teacher: What's the difference between "He cleans the plate" and "the plate is cleaned by him."

Student: In first sentence 'he' is not married, but in second sentence 'he' is married....😜😜

Sunday, 5 November 2017

படித்ததில் பிடித்தது

சொர்க்கத்துக்கு சென்ற இறந்த ஒருவர் , அங்கிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான கடிகாரங்களை கண்டு வியந்து, அருகிலிருந்த ஒரு தேவதையிடம் கேட்கிறார் - ஏன் இத்தனை கடிகாரங்கள் என்று...
   அதற்கு அந்த தேவதை - பூலலோகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கடிகாரம் இங்கு இருக்கிறது. அவர்கள் பொய் பேசப் பேச இங்கிருக்கும் கடிகார முட்கள் நகரும். இறுதியில் அவர்களது கடிகாரத்தை வைத்து அவர்கள் பேசிய பொய்களை கணக்கிடுவோம் என்றது.
     வியந்த அந்த நபர், தன் முன்பு இருந்த கடிகாரத்தை காட்டி - இதன் முட்கள் நகரவே இல்லையே - ஒருவேளை கடிகாரத்தில் ரிப்பேரா என்று கேட்க -
      பலமாக சிரித்த அந்த தேவதை,  இல்லை அது மதர் தெரஸாவின் கடிகாரம். அவர் பொய் ஏதும் பேசவில்லை.  ஆகவே முட்கள் நகராமல் உள்ளன என்றார்..!
    நம்ம ஆளு ஆர்வமிகுதியால், அப்ப மோடி கடிகாரம் எங்கே இருக்கிறது என்று கேட்க -
    அதுதான் எங்க ஆபீஸில் டேபிள் பேனாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றதாம் அந்த தேவதை...

Sunday, 29 October 2017

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது

ஆண் என்பவன்...

கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி செய்பவன்.

மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில்,
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,
தாங்கிக்கொண்டே ஓடுபவன்.

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.

அவன் வெளியில் சுற்றினால்,
'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில்,
'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்
'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.

தாய் சொல்வதை கேட்டால்,
'அம்மா பையன்' என்போம்.

மனைவி சொல்வதை கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்' என்போம்.

ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்

பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...
ஆண்
அழத் தெரியாதவன் அல்ல*
கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..

கரடுமுரடானவன் அல்ல ..
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன் ..

Tamil super story

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன்,  ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.

கள்வர் பயம் இல்லை.

அதிக வரிகள் விதிப்பதில்லை.

முறையாக நீதி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.

ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.

இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய்.

உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.

அதையே செய்.

என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.

நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார்.

சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.

அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா.....???'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்.....???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்.......???'

விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய்.

இப்போது இது எனதில்லை.

நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.

அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.

இந்த உலகம் எனதல்ல.

இந்த உடல் எனதல்ல.

எனக்கு அளிக்கப்பட்டது.

இந்த உயிர் எனதல்ல.

எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

Friday, 27 October 2017

சிந்தனை செய் மனமே.!!

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

Devil story

நள்ளிரவு நேரம்......
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று Politicians பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 1.American Politician, 2.Russian Politician.3.Tamil Nadu Politician.
திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.
"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது."உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.
அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்.
"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்
American politician தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
Russian politician தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"
உடனே Tamil Nadu Politician தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ...
"இந்த தண்ணீரை கொண்டு வா !"
என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
நீதி :-
இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்
Tamilnadu politician.
💀Tamilnadu politicians💀

வெயில் கதை


கடவுள் ஒருநாள்,
     
             ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை  open பண்ணுனார்..

             அதற்கு "உலகம்" என்று தலைப்பிட்டார்.......

அதில் முதலில்,

                வானத்தையும், பூமியையும் add பண்ணுனார்,

அடுத்து, சூரியன், கடல், மழை, ஆறு,குளம்,மரங்கள், விலங்குகள்,

பறவைகள், ஊரும் பிராணிகள் என வரிசையாக add பண்ணி

மகிழ்ந்தார்...

இறுதியாக,

                மனிதனை add பண்ணுனார். மனிதனை add பண்ணிய

கடவுள், மிகவும் மனமகிழ்ந்து, " இனி இந்த group கு நான்

தேவை இல்லை, மனிதனே இந்த group ஐ நல்ல படியாக நடத்தி

செல்வான்" என்று எண்ணி, மனிதனை group admin ஆக்கி

விட்டு, அவர் left ஆகி சென்று விட்டார்.

                 கொஞ்ச நாட்க்கள் நன்றாக செயல் பட்ட மனிதன்,

காலப்போக்கில் தன் சுய நலத்திற்க்காகவும், சுய

இலாபத்திற்க்காகவும், மரங்கள், குளம், ஆறு போன்றவற்றை

remove பண்ணி விட்டு, அதற்க்கு பதிலாக, shoping mall,

apartment, factory's போன்றவற்றை add பண்ணினான்.

                 இதனால் கோபம் கொண்ட மழை, " என் நண்பர்கள்

இல்லாத இந்த group ல் நானும் இருக்க மாட்டேன் என்று,

கோபத்துடன் left ஆகி சென்றது... ஆனால் சூரியன் left ஆகாமல்,

group ல் இருந்த படியே, தன் கோபத்தை மனிதன் மீது காட்டிக்

கொண்டிருக்கிறது....

Millionaire story

A jobless man applied for the job  of "sweeper" at Microsoft.

The HR interviewed him..

Then watched him cleaning the floor as a test.

"You are Appointed" he said.

"Give me your e-mail address and I'll send you the forms to fill in".

The man replied "But I don't have a computer, neither an email."

"I'm sorry", said the HR manager...

"If you don't have an email, that means u do not exist. And who doesn't exist, cannot have the job."

The man left with no hope at all.

He didn't know what to do, with only $10 in his pocket.

He then decided to go to the supermarket & buy a 10Kg tomato crate.

He then sold the tomatoes in a Door to Door round. In less than two hours, he succeeded to double his capital.

He repeated the operation three times, and returned home with $60.

The man realised that he can survive this way, and started to go everyday earlier and return late. Thus, his money doubled or tripled everyday.

Shortly, he bought a cart, then a truck, then he had his own fleet of delivery vehicles. 5 years later, the man is one of the biggest food retailers in the US .

He started to plan his family's future, and decided to have a life Insurance. He called an insurance broker, and chose a protection plan.

When the conversation was concluded, the broker asked him his email. The man replied, "I don't have an email."

The broker answered curiously, "You don't have an email, and yet have succeeded to build an empire. Can you imagine what you could have been if you had an email?!"

The man thought for a while and replied,
"Yes, I'd be a sweeper at Microsoft!"

Moral of the story:

1) Internet/email/bbm/whatsapp is not the solution to your life.

2) If you don't have facebook a/c., internet/email/bbm/whatsapp , and work hard, you can be a millionaire.

Mind ur work, then ur mind will have no time to mind others...

One day a new employee went to the HR and said .. I'm not interested in co ming to the office anymore.”

The HR responded, "But why?”

Then the boy told "Ah! I can speculate many employees speaking badly about other Employees on back of him/her; one employee who can't talk well; Few employees looking at their fellow employees in a wrong way, there are hell lot of things that I can prove you wrong in our Office."

Boy: There are people who do a lot of politics and talk all negative all the time. Few only do gossips all the time.

The HR replied "OK, but before you go, can you do me a favour: take a full glass of water and walk three times around the office area without spilling a drop on the floor.

"Afterwards, leave the Office if you wish for.”

The boy thought: it's a matter of minutes for him.

And he walked three times around the office floor.

Then he reached HR saying that he is done with it.

And the HR asked "When you were walking around the Office floor did you see any employee speaking badly about another Employee? Any Gossips? Any disturbances?

The Employee replied “No."*

HR: "Did you see any Employee looking at other employees in wrong way?"

Boy said "No”

HR: "You know why?”

Boy: "No”

HR: *"You were focused on the glass, to make sure you didn't tip it and spill any water. The same goes with our life. When our focus is on our priorities, we don't have time to see the mistakes of others.”

Moral of the story.

"Concentrate on your priorities and not on other's Mistakes."

எலியின் அட்டகாசம்

இந்தகதையை_10தடவைபடிச்சாலும்திரும்பதிரும்பவும்சிரிப்பேன்!!

அவ்ளோ காமெடி!!

காட்டில் ஒரு புலி 🐅சிகரெட்🚭 பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி🐀 சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு🏞 எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி🐅 சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை🐘 உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி🐀 யானையிடம்🐘 கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை🐘 ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று 🐀🐅🐘 பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க� மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி🐀 சிங்கத்திடம்� கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை  இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன்🐀 நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு 👂சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும்🐅 யானையும்🐘 சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே�, தாங்கள் ஏன் இந்த சமாதான🐀 தூதுவனை அடித்தீர்கள்...?"

அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி 🐀🐭😇கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு🏞 பூராவும் நடக்க😭 வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."🐀😆🙏

முதல் ஐந்து முட்டாள்கள்

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

Cockroach Theory

A beautiful speech by Sundar Pichai - an IIT-MIT Alumnus :
The cockroach theory for self development

At a restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady.

She started screaming out of fear.

With a panic stricken face and trembling voice, she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach.

Her reaction was contagious, as everyone in her group also got panicky.

The lady finally managed to push the cockroach away but ...it landed on another lady in the group.

Now, it was the turn of the other lady in the group to continue the drama.

The waiter rushed forward to their rescue.

In the relay of throwing, the cockroach next fell upon the waiter.

The waiter stood firm, composed himself and observed the behavior of the cockroach on his shirt.

When he was confident enough, he grabbed it with his fingers and threw it out of the restaurant.

Sipping my coffee and watching the amusement, the antenna of my mind picked up a few thoughts and started wondering, was the cockroach responsible for their histrionic behavior?

If so, then why was the waiter not disturbed?

He handled it near to perfection, without any chaos.

It is not the cockroach, but the inability of those people to handle the disturbance caused by the cockroach, that disturbed the ladies.

I realized that, it is not the shouting of my father or my boss or my wife that disturbs me, but it's my inability to handle the disturbances caused by their shouting that disturbs me.

It's not the traffic jams on the road that disturbs me, but my inability to handle the disturbance caused by the traffic jam that disturbs me.

More than the problem, it's my reaction to the problem that creates chaos in my life.

Lessons learnt from the story:

I understood, I should not react in life.
I should always respond

The women reacted, whereas the waiter responded.

Reactions are always instinctive whereas responses are always well thought of.

A beautiful way to understand............LIFE.

Person who is HAPPY is not because Everything is RIGHT in his Life..

He is HAPPY because his Attitude towards Everything in his Life is Right..!!

Never be too quick to judge a book by its cover

An old lady handed her cheque to a bank teller and said, “I would like to withdraw ₹500..”

The female teller told her, “For withdrawals less than ₹5,000, please use the ATM”.

The old lady then asked, “Why?” The teller irritably told her, “These are rules. Please leave if there is no other matter. There is a queue behind you.” She then returned the card to the old lady.

The old lady remained silent. But she returned the cheque to the teller and said, “Please help me withdraw all the money I have.”

The teller was astonished when she checked the account balance. She nodded her head, leaned down and said to the old lady, “My apologies Granny, you have ₹3.5 billion in your account and our bank does not have so much cash currently. Could you make an appointment and come again tomorrow?"

The old lady then asked, “How much am I able to withdraw now?”

The teller told her, “Any amount up to ₹300,000.”

The old lady then told the teller that she wanted to withdraw ₹300,000 from her account. The teller did so quickly and handed it to the old lady respectfully. The old lady kept ₹500 in her bag and asked the teller to deposit the balance of ₹299,500 back into her account. The teller was dumbfounded.

The moral of this story is that rules are inflexible but we humans can be flexible when the situation requires us to be. We should not treat people based on their looks or how they are dressed. Rather, we should treat everyone with respect. And ... never be too quick to judge a book by its cover 

Corporate lesson

Jack and Max are walking to the church for the Sunday prayer..

Jack wonders whether it would be all right to smoke while praying.

Max replies, “Why don’t you ask the Priest?”

So Jack goes up to the Priest and asks, “Father, may I smoke while I pray?”

The Priest replies, “No, my son, you may not! That’s utter disrespect to our religion.”

Jack goes back to his friend and tells him what the good Priest told him.

Max says, “I’m not surprised. You asked the wrong question. Let me try.”

And so Max goes up to the Priest and asks, “Father, may I pray while I smoke?”

To which the Priest eagerly replies, “By all means, my son. By all means. You can always pray whenever you want to.”

Moral of the story

 The approval you want depends on the way u ask for it!!

Dedicated to all professionals !!..

ஃபிடல் காஸ்ட்ரோ

ஃபிடல் காஸ்ட்ரோ".. தெரியாதவர்களுக்கு !

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.

தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.

காரணம்...

ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.

 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.

 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.

மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.

 உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.

2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.

இன்று வீடில்லாத க்யூபியன் யாருமில்லை.

 யாருக்கும் சொத்து வரி கிடையாது.

வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.

காரணம்...

ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.

ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
கியூபாவை விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் சுயநல அயோக்கியத்தனமே

இன்னொரு சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.

உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே

 உண்மையான சுதந்திர போராட்டத்திற்கு ஒன்று படுவோம்

படித்ததில் ரசித்தது.

ஒருவர் ஒரு கடைக்குச் சென்றார்.

அங்கே எல்லாப் பொருட்களுக்கும் நடுவே வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை அவர் கவனத்தை ஈர்த்தது.

அதில் ஒரு சீட்டுத் தொங்கியது.

சிலையின் விலை ரூ. 1000; சிலை பற்றிய கதையின் விலை ரூ. 3000 என்று சொன்னது சீட்டின் வாசகம்.

சிலை போதும். கதை வேண்டாம் என்று ரூ. 1000 கொடுத்து சிலையை வாங்கிக் கொண்டு போனான்

சிலையோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து சில எலிகள் வரத் துவங்கின.

அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது.

என்ன செய்வதென்று தெரியாமல் அவர், அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையைக் கடலில் வீசி விட்டார்.

பின் தொடர்ந்து வந்த எலிகளும் கடலில் குதித்து மூழ்கின.

நிம்மதி அடைந்து திரும்பியவர் யோசித்தபடியே, மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார்.

கடைக்காரர் அந்த சிலையின் கதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி கதைப் புத்தகத்தைத் தேடி வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.

வேண்டாம்.
அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல்வாதியின் சிலை கிடைக்குமா?” என்று கேட்டார்.

ஒரு சூப்பர் ஸ்டோரி

டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
 ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...

டீச்சர் ;ஏன்டா...????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர்...
 குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?

டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...🤗

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும😤

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல கரண்டு இல்லன்னு...😇

டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே... பொய்யா சொல்ட்ற..🙄

மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...😣

டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...🙃

மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி... லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...😕

டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான...😒

மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில...😰

டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா...😧

மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல...😡

டீச்சர்: அது ஏன்...😵

மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்...😠 அதான் மொதல்லயே  சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு...😬